பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

என்பது அவருக்குத் தெரிந்தது. அப்போது அவர் இவனை வியந்து பாடினார்[1] இந்தச் செய்தியைச் சிறுபாணாற்றுப் படையுங் கூறுகின்றது.

அதிகமான் அரசர் கரும்பைக் கொண்டுவந்து பயிராக்கியதையும் ஔவைக்குக் கருநெல்லிக்கனி கொடுத்ததையும் பிற்காலத்து நூலாகிய கொங்குமண்டலச் சதகமுங் கூறுகின்றது.

“சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொலௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலே யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவதுங் கொங்கு மண்டலமே”

இவ்வதிகமான் ஔவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான் என்பது ஒளவையார் பாடிய புறம் 95-ஆம் செய்யுளிலிருந்து தெரிகின்றது. இந்தத் தூது எதன் பொருட்டு அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை.

-அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு ஒரு மகன் பிறந்தான். அப்போது போர்க்களத்தில் போர் செய்து கொண்டிருந்த அதிகமான் இந்தச் செய்தி அறிந்து போர்க்கோலத்தோடு விரைந்து வந்து தன் மகனைக் கண்டு மகிழ்ந்தான். அந்தக் காட்சியை ஔவையார் பாடியுள்ளார். (புறம். 100) அந்த மகனுடைய பெயர் பொகுட்டெழினி என்பது.

இவர்கள் காலத்தில் தென் கொங்கு நாட்டை யரசாண்ட பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் நாட்டின்மேல் படை


  1. “நீலமணி மிடற்று ஒருவன் போல, மன்னுக பெரும் நீயே தொன்னிலே பெருமலைவிடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது. ஆதனின்னதத் தடக்கிச் சாதல் நீங்க வெமக்கீத்தனையே” (புறம். 91: 5-11) கமழ்பூஞ்சாரல் கவினியதெல்லி, அமிழ்து விளை தீங் கனி ஒன்வைக்கீந்த, உரவுச் சினங் கனலும் ஒளி திகழ் நெடுவேல், அரவக் கடற்றானை யதிகன்” (சிறுபான். 100-103).