பக்கம்:கொடுந்தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியீட்டாளர் முகவுரை சரசுவதி மகால் நூலகத்தின் அரிய வெளியீடு களில் ஒன்றான 'கொடுந்தமிழ்' என்னும் வீரமர் முனிவர் இயற்றிய விழுமிய இலக்கண நூல், தற்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்படு கின்றது. இலத்தீன் மொழியில் முதலில் எழுதப்பட்டுப் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் அருமையும் பெருமையும் வாய்ந்த தமிழ் இலக்கண் நூலாகும்.

1971-இல் சரசுவதி மகால் நூலக வழி இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தது. முதற்பதிப்பாக அக்கால் நமது நூலக வழி மலர்கையிலேயே, மறுபிரசுர முதற் பதிப்பாக அது அமைந்தமை குறிப்பிடத்தக்கது. ... தமிழ் கற்கும் அயன்மொழி மாணவர்க்கும். தமிழின் பால் ஈடுபாடுகொள்ளும் பிற மொழியினர்க்கும் அரும் பயன் அளிக்கும் இந்நூல் சரசுவதி மகால் நூலகத்தின் சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாகும். . இந்நூல் இப்பொழுது ஆர்வலர்களின் விழைவையும் தேவையையும் கருதி மீண்டும் வெளியிடப்படுகின்றது. %

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடுந்தமிழ்.pdf/18&oldid=1502150" இலிருந்து மீள்விக்கப்பட்டது