இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
இந்நூல் வெளியீட்டுக்குத் தேவையான நிதி உதவியை நல்கியுள்ள நடுவண் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி மகிழ்கின்றேன். இவ்வெளியீடு நன்முறையில் வெளிவர ஆவன செய்துள்ள சரசுவதி மகால் நூலக நிருவாக அலுவலர் திரு.எம். உத்திராபதி அவர்களுக்கும், நூலக வெளி யீட்டு மேலாளர் திரு. அ. பஞ்சநாதன் அவர்களுக்கும் என் பாராட்டுகள். நூல் அச்சுப்பணியைச் செம்மையுற நிறைவு செய்துள்ள சிதம்பரம் கஜேந்திரா அச்சகத்தார்க்கும், இந்நூல் நன்முறையில் வெளிவரத் துணைநின்ற ஏனையோர்க்கும், என் பாராட்டுகள். நூலுலகம் இவ் வெளியீட்டுக்குப் பெருவரவேற் பினை நல்குதல் திண்ணம். தஞ்சாவூர் 24-2-97 வி.கு. ஜெயக்கொடி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் 1மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம்