பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 கொய்த மலர்கள் போட்டியிடுவதும், அதன் வழிப் பொறாமை உள்ளம் கொண்டு ஒருவருக்கொருவர் மாறுபட்டு நிற்பதும் மாணவர் உலகில் இன்று நமக்கு வேண்டாதன. எனவே கல்லூரி அமைப்பாளர்களும், அரசியலாரும் இத்துறையில் கருத் திருத்த வேண்டும். மாணவர் படிக்கும் நேரமும் அறிந்து கொள்ளும் பொருளும் மிகக் குறைவு. சுற்றுலா என்று பல ஊர்கள் சுற்றுவதும், கூட்டங்கள் கூட்டிப் பொழுது போக்கு வதும், நாடகம் முதலியன கற்றுக்கொள்ள ஊக்கமளிப் பதும் இன்றைய கல்வித் துறையில் இடம் பெற்றுள்ளன. இவற்றை யாரும் தேவையற்றன என்று சொல்ல மாட் டார்கள். இவையெல்லாம் இல்லாத காலத்திலே படித்த நம் முன்னோர்கள் - நமது பரம்பரையினர் - அறிவற்றவர் களாகவா இருந்தார்கள்? அவருள் எத்தனை அறிஞர்கள் இன்றும் நாட்டின் மாணிக்கங்களாக விளங்குகிறார்கள்! ஆகவே, அத்தகைய பல முகக் கருத் திருத்தும் கல்வி நிலை --மாறவேண்டும்: பாடத்திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பெருகின்றன. தாம் ஆளவந்த காரணத்தால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்ற கருத்தில் ஒவ்வொரு ஆளும் கட்சியும் செயலாற்றத் தொடங்கினால் நாட்டு நிலை என்னாவது? ஆம்ரபப் பாடசாலையிலும் உயர் நிலைப் பள்ளியிலும் விடுதலை பெற்ற பிறகு என்னென்னவோ மாறுதல்களைக் காண் கின்றோம். கல்லூரிகளிலே 2+2=4 என்பது போய், 1+3=4 என்ற மாறுதல் புகுத்தப் பட்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் வேறு சில மாறுதல்கள் வரப் போவதாகவும் அறிகிறோம். இவையெல்லாம் அமைதி யான கல்வியாற்றில் அலைமோ தவிடும் கற்களாக அன்றோ அமைகின் றன. .