பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கொய்த மலர்கள் இருந்தமையின் அரசியலின் வழியும் அவற்றை வளர ஒட்டாமல் தடுத்திருக்கக்கூடும். எனவே இடைக் காலத்தில் பல காரணங்களால் நாடகமும் கூத்தும் நடனமும் இசையும் தமிழ்நாட்டில் நன்கு வளராது நின்றுவிட்டன என்பது பொருந்தும். தமிழ் நாட்டில் நாடகத்துக்குக் கூத்து என்ற ஒரு பெயரும் உண்டு. 'கூத்துள் படுதல்' என்றே அதன் வழி இயங்கும் நிலை குறிக்கப் பெறும். தமிழ்நாட்டில் பல வகைக்கூத்துக்கள் இருந்தன என்பதைப் பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.. தனிப்பட்ட வகையிலே அமைகின்ற கூத்துக்கள் பதினோரு வகைப்படும் என்பர். நாடகம் முதலியன அப் பதினோரு வகைக்கு அப்பாற்பட்டன: நாடகங்களின் நடுவிலே இக்கூத்துக்களுள் ஒன்றிரண்டு இணைக்கவும் பெறலாம். கடைச்சங்க காலத்தில் 'கூத்து நூல்' என்ற ஒரு நூலே இருந்ததாக இறையனார் களவியல் உரையால் அறிய முடிகிறது. கூத்தாடுதல் என்றால் மகிழ்ச்சி மிகுதல் என்றும் பொருள் உண்டு. எனவே சேர்ந்திருக்கும் மக்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுதற்காக, உலகியல் முறையோடு சில கற்பனைகளையும் கலந்து நடிக்கப் பெறு வதே நாடகம் என்பது நன்கு அறியப்படும். தொல்காப்பியத்தில் நாடகம் குறிக்கப் பெறுகின்ற தேனும், அக்காலத்தில் இருந்த நாடக நூல்களை நம்மால் அறிய முடியவில்லை. கடைச்சங்க காலப் பாடல்கள் பல நாடக அமைப்பிலேயே உள்ளன. கலித் தொலைப் பாடல்களில் சிலவற்றை அப்படியே நாடகமாக்கி நடிக்க முடியும். அகநானூறு போன்ற இலக்கியப் பாடல்களில் சில நாடக அமைட்பில் இருக்கின் றன. என்றாலும் அவற் றைத் தனி நாடக நூல் என்று கூறமுடியாது. சங்க காலத்தில் இருந்த பல நாடக நூல்களும் அவற்றை விளக்கிக் காட்டும் நாடகம் பற்றிய இலக்கண நூல்களும் இடைக்காலத்தில் மறைந்துவிட்டன; அல்லது மறைக்கப் பட்டன. எனவே இன்று நாடகமும் இசையும் பற்றிய