பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 157 பல பழைய கருத்துகளை நம்மால் அறிய முடியவில்லை. எனினும் சிலப்பதிகாரத்தினாலும் அதன் உரைகளாலும் அவைபற்றி ஓரளவு அறிந்துகொள்ள முடிகின்றது. சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்றே சொல்லு வார்கள். அதை வெறும் காட்பியம் அல்லது இலக்கியம் என்று சொன்னாலும், அதில் நாடகத்துக்கு வேண்டிய அத்தனை நல்ல அமைப்புகளும் பொருந்தியுள்ளன. அதில் நடனம் பற்றியும் அந்த நடனம் நடக்கும் அரங்கு முதலியன பற்றியும் பல விளக்கங்கள் கூறப்படுவதோடு, காடகத்துக்கு வேண்டிய பல வரிப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. கானல் வரியும், வேட்டுவ வரியும், குன்றக் குரவையும், ஆய்ச்சியர் குரவையும் நாடகங்களுக்கு ஏற்ற நல்ல பாடல்கள் அல்லவா! அவற்றை வைத்தே புதிதாக நல்லதொரு நாடகமே எழுதிவிடலாம். மற்றும் அந்த நூலில் பல பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதாக அமையும் இடங்களிலே நாடக அமைப்பே கையாளப் பெறுகின்றது. கோவலன் கண்ணகி பேச்சும், கவுந்தி அடிகள் மாதவி போன்றார் பேச்சும், வழக்குரை காதையும், பிறவும் நாடக அங்கங்களாகவே காட்சி அளிக்கின்றனர். சிலப்பதிகாரத்தில் கதைப் போக்காய் ஆசிரியர் வாக் காகச் சொல்வதை எடுத்துவிட்டால் அப்படியே அது ஒரு நாடக நூலாக உருப்பெற்றுவிடும் என்பது உறுதி. எனவே சங்க காலத்தை ஒட்டிய இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே நல்ல நாடகங்களும், அந் நாடக முறைக்கேற்ற உரைநடை, பாட்டு, இசை முதலியனவும் உறுப்பெற்ற விட்டன எனக் காண முடி கின்றது. எனினும், அந்த நாடகமும் இசையும் தமிழ் நாட்டு வரலாற்றின் இருண்ட காலத்திலே சற்று நிலை கெட்டன எனலாம். இருண்ட காலத்துக்குப்பின் பல்லவர் தமிழ் நாட்டை ஆண்ட காலத்திலும் நாடகமும் இசையும் போற்றப் பட்டன. இசை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தேவாரம் போன்ற தோத்திரப் பாடல்கள் நன்கு விளக்