பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கொய்த மலர்கள் கெடாத வகையில் விளங்கியதையே 'மாசு இல்' என்ற அடைமொழியால் சிறப்பிக்கின்றனர். 'காம்பு துகிலவை' என்று பெரியாழ்வாரும் பின்னாட்களில் நன்கு கூறி யுள்ளமை அறிகிறோம். ஆடைக்கு இருமருங்கும் கரை யிட்டார்கள் என்பதை 'இரு கோட்டு அறுவையர்' (நெடு 35) என்ற நக்கீரர்தம் அடியால் அறிகிறோம். எனவே மக்கள் ஆடைகளுக்குப் பல வண்ணங்களினாலே இரண்டு பக்கங் களிலும் கரையிட்டார்கள் என்பது நன்கு தெரிகிறது. ஆடையின் இருமருங்கும் இட்ட கரைகளைப்பற்றிப் பின்வந்த சுந்தரர் கூறிய அடிகள் ஈண்டு நினைவிற்கு வருகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டில் நாகைப்பட்டினம் சிறந்த துறை முகப்பட்டினமாக விளங்கிற்று, ஆடைகள் பல்வேறு வண்ணக் கரைகளோடு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன, அந்த நகரில் அவற்றின் அழகுகளை யெல்லாம் கண்ட சுந்தரருக்கு அவை தேவை என்ற உணர்வு உண்டாயிற்று. உடனே ஆண்டவனை நோக்கிப் பாடினார். பல்வேறு பொருள்களைக் கேட்டுக் கொண்டே வந்த சுந்தரர், • காம்பினொடு கேத்திரங்கள் பணித்தருளல் வேண்டுப் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே' என்று கேட்டார். இருவகை ஆடைகள் அவர் உள்ளம் கவர்ந்தன. ஒன்று காம்பு. மற்றொன்று நேத்திரம். காம்பு என்பதுபற்றி மேலே சங்க இலக்கியத்திலும் கண்டோம். 'காம்பு' என்பது, கரும்பின் கணுப்போன்று நீலமும், பச்சையும், பிற வண்ண ங்களும் கலந்து, அமைத்த கரையாக வேண்டும். 'நேத்திரம்' என்பது. இன்றைய 'மயில் கண்' போன்றது. எனவே இவ்வாறு பல வண்ணங்கள் கொண்டு கணுக்கணுவாகவும், கண் கண்ணாகவும் அமைத்த கரைகளை உடைய ஆடைகளை அக்காலத்து மக்கள் விரும்பி உடுத்தார்கள் என்பது, தெளிவு. மற்றும் உருத்திராட்சக் கரை என்று சொல்லப்