பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையும் தையற்கலையும் 35 தையல் வேலை நாட்டில் நடைபெற்றது என்பதைத் திட்ட மாக அறிய முடிகின்றது. எனவே, தமிழ் நாட்டுப் பழங்காலத் தொழில்களுள் ஒன்றாகிய தையல் தொழில் இன்று மிகச் சிறந்த வகையில் ஓங்கி வளர்ந்து வளருவதைக் காண மகிழ வேண்டி யுள்ளது. அத்துறையில் அனைவரையும் ஊக்கும் - உணர் வூட்டும்-தையற்கலை இதழ் பொங்கல் நாளில் பூக்கிறது. தையற்கலை சிறக்க என நாமும் வாழ்த்துவோம்! தமிழர் தையற்கலை வளம்காட்டும் நல்வகை உடை அணிந்து, பொங்கும் இன்பத்தைப் பொங்கல் நாளில் பெறுவார் களாக