சங்க காலச் சைவம் 39 கண்டன். ஆலமர்செல்வன். பிறைசூடி, நீறணிந்தோன், மழுவேந்தி, பிஞ்ஞகன், பரசுபாணி. முருகன், வேலன் என்ற பல பெயர்கள் அவ்விறைவன் தோற்ற நிலைகளுக்கு ஒப்ப அமைகின்றன எனினும் ஆண்டவன் ஒருவனே. ' ஒருநாமம் ஓருருவம் ஒன்று மிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ' என்று மாணிக்கவாசகர் உளமுருகிப் பாடுவது இதுபற்றி யே யாகும். கால எல்லை இச் சிவன் அல்லது இறைவன் என்று தோன்றினான்' என்று சொல்ல முடியாது. அவன் காலமும் கணக்கும் நீத்த காரணன்; கால காலன்; அவனைக் கால எல்லை பில் கட்டுப்படுத்த முடியாது. எனினும், நம் சமரசம் அவன் வாழ்வைக் கால எல்லைக்குள் கட்டுப்படுத்த விரும்பு கிறது தான் காலம் கடந்தவனாயினும், 'வேண்டுவார் வேண்டுவதே ஈதல்' அவன் தொழிலாதலின், அவனும் அதற்குக் கட்டுப்பட்டுவிட்டான். ஆம்! நான் அவனைச் சங்க கால எல்லையில் கட்டுப்படுத்தி, அக்காலத்தில் அவன் எவ்வெவ்வாறு தமிழ்நாட்டில் களிநடம் புரிந்தான் என்பதைக் காட்டல் வேண்டும். சங்க காலத்தில் சைவம் வாழ்ந்த வகையைக் காட்டுவதே என் பணி. அறுதியிட்ட கால எல்லை ஆண்டவனுக்கு இன்றேனும் நமக்கு உண்டு, எனவே, என் கால எல்லையில் நின்று உற்ற பணியினைத் தொடர்கின்றேன். சங்ககாலச் சமயங்கள் சங்க காலத்திலே சைவமே தமிழ் நாட்டில் தலை சிறந்த சமயமாக இருத்தது, அதை அடுத்து, வைணவமும் சிறந்திருந்தது. பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டில் வை