பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 'சூருடை முழுமுதல் தடிந்த பேரிசை கடுஞ்சின விறல்வேள் (பதிற். 11) எனக் காட்டுகின்றதுஇம் முருகன் கரிய மணமிக்க கடம்ப மலர் அணிந் திருந்த சிறப்பை, கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் சூர் நவை முருகன்'-(புற. 38) எனப் புறநானூறு எடுத்துக் காட்டுகின்றது. இம் முருகனைப் போற்றும் வழியறிந்து வழிபாடி யற்றும் முறையே முருகாற்றுப் படையாகப் பின் உருப் பெற்றது என்ற உண்மையை, அகநானூற்றில், 'உருவச் செந்தினை குருதியோடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுகாள்' (அகம். 20) என்று வெறிபாடிய காமக் கண்ணியார் அழகுபடக் காட்டுகின்றார். இம்முருகனது வென்றிச் சிறப்பைப் பாடிய தால் தான் போலும் அவர் 'வெறிபாடிய' என்ற அடையால் பாராட்டப்பெற்றார். எனவே, முருகன் சங்க காலத்தே கொற்றவையின் மைந்தனாக வெற்றி விளைக்கும் விறலோனாக விளங்கினான் என்பது நன்கு போதரும். சிவனும் திருமாலும் திருமால் வைணவ சமயத்து முதற்பெருந் தெய்வ மாகப் போற்றப்படினும் சிவத்தொடு இணைத்தே சைவர் கள் வழிபடுகிறார்கள். 'அரியலால் தேவி இல்லை' எனப் பிற்காலத்தே அப்பர் பாடினார். திருமலையில் உள்ள இறைவனைப் பாடிய ஆழ்வார் ' திரண்டருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு இரண்டுருவம் ஒன்றாய் இயைந்து' இருந்ததென நலம் தோன்ற நன்கு காட்டுகின்றார். சைவர் கோயில்களில் திருமால் உருவமும் நிலைத்த இடம் பெற்றிருப்பதை இன்றும் காண்கிறோம், சங்க காலத்