________________
56 கொய்த மலர்கள் இதன் வழி அக்காலத் தெய்வ வழிபாட்டு முறையும் நன்கு விளங்குகின்றது. மற்றும் பெண்கள் தம் கண வரைப் போற்றும் முறையும் தெரிகிறது. மேலே குறுந் தொகை 87இல் தலைவி தலைவனுக்குத் தொல்லை வரா திருக்கத் தெய்வத்தைப் பரவுவதாகக் கண்டோமாயினும், சங்ககாலப் பெண்கள் தங்கள் நாயகரில் தெய்வம் தவம் பிறிது இலை என்று எண்ணியே, வாழ்ந்தார்கள் என்பது தெளிவு, 'காடுறை சிறு தெய்வம் ஒருவேளை சீற்றத் தால் தம் கணவருக்குவ தீங்கிழைக்குமோ' எனக் கருதிய தலைவி, தன்னிலையை அத் தெய்வத்திற்கு உணர்த்திய தாகக் கபிலர் காட்டுகின்றாரே ஒழிய, அத்தெய்வத்தை வணங்கியதாகக் கூறவில்லை. சங்க காலத்திலே சிவனும் பிற கடவுளரும் சிறந்த தெய்வங்களாகப் போற்றப் பெற்றாலும் கூட, அக் காலப் பெண்கள் அக் கடவுளரை வணங்கியதாகக் காண முடியாது. • தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை என்ற வள்ளுவர் வாய்மொழிட் படியே தமது வாழ்வை அமைத்துக் கொண்டனர். இச் சிறந்த கற்பொழுக்க நெறியை சங்ககாலத்தை ஒட்டிவந்த இருபெருங் காப்பியங் களும் நன்கு காட்டுகின்றன. கணவன் தன்னை விட்டுப் பிரிந்த கண்ணகிக்கு, அவள் கோமி தேவந்தி, கணவனை அடையப் புகாரில் உள்ள காமவேள் கோட்டம் தொழ வேண்டும் எனவும், பல தீர்த்தங்களில் மூழ்க வேண்டும் எனவும் காட்டுகின்றாள் ஆனால் கற்பிற் சிறந்த கண்ணகி தன் கணவனைத் தவிரப் பிற தெய்வங்களை வழிபடாக் கடப்பாட்டில் நின்றவளாது லின்-கணவன் தன்னை கைவிட்ட போதிலும், அவளே தன் தெய்வம் எனக் கொண்டவளாதலின்-தேவந்தி சொல்லிய அத்தனை வழிபாடுகளையும் 'பீடன்று' என்)