பக்கம்:கொய்த மலர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சொல் கேளிர் 103 குறள் வாழும் நாட்டில்-சங்கப் புலவர் அறமுணர்த்திய காட்டில்-மூவேந்தர் முறை திறம்பாது ஆண்ட நாட்டில், இன்றும் வாழும் பிணக்குகளுக்கு இடம் உண்டோ? இல்லையே! இதை எண்ணிய பாரதி. பல சொல்லிப் பயனில்லை. ஒரு சொல் கேளிர் எனச் சுருக்கமாகத் தமிழ் மக்களுக்குச் சேதி சொல்லுகிருன். அதுதான், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் . தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்பது. ஆம்! தமிழ்ச் சமுதாயம் தழைக்க வேண்டு மால்ை, தலை கிமிர்ந்து வாழவேண்டுமானல், தமிழ்மொழி தரணியில் உள்ள ஊர்தோறும் தெருவெல்லாம் செழிக்கத் தான் வேண்டும். தமிழ் செழிக்கிறது. உலக அரங்கில் தமிழுக்கு இட முண்டு. வள்ளுவர் குறளும், கம்பன் மொழியும் பல மொழிகளில் பெயர்க்கப் பெறுகினறன. எனினும் இன் னும் உலகமக்கள் தமிழின் இனிமையையும் தொன்மை யையும் கன்கு உணரவில்லை என்பதை உலக நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. எனவே தமிழராகிய அனைவரும் பாரதி யின் ஒரு சொல்லைக் கேட்கத்தான் வேண்டும். இன்று கேளாது வாளாயிருப்போமால்ை, பின் என்றும் தமிழ்ச் சமுதாயம் தலைதுாக்க வழியில்லை. பிறகாட்டாரெல்லாம் தமிழின் தொன்மையையும், அதிலுள்ள நிலைமையையும் காண அவாவுகின்றனர். தமிழர் அவற்றையெல்லாம் பிற மொழிகளில் விளக்கி எழுதி உலகுக்கு அன்னை தமிழை அறிமுகப் படுத்தவேண்டும். பாரதி காட்டிய பல உண் மைகளை உலகுக்கு உணர்த்த வேண்டும். வெளி நாட் டோர் வணக்கம் செய்யத் தக்க நல்ல கலைப்பெட்ட கங்கள் தமிழில் உள்ளன. தமிழர் அவன் ஒரு சொல்வழி, தாம் சேமமுற - தம்காடும் மொழியும் சேமமுற - தமிழை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். பம்பாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/105&oldid=812312" இலிருந்து மீள்விக்கப்பட்டது