பக்கம்:கொய்த மலர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 113: அறிவின் திறம் வியக்கற்பாலதன்ருே பல உவமைகள் வாயிலாகவும், உற்ற அனுபவ வாயிலாகவும் தலைவன் தலைவியர் வாக்கில் அந்தக் கூடல் இன்பத்தையும், உடல் வழி உற்றுப் பிறக்கும் உள்ள நெகிழ்ச்சியையும் பிரிதலாற்ரு உள்ளநிலையையும்.அவர் எண்ணி உணர்த்தும் போது நாம் நம்மை மறக்கத்தான் வேண்டும். ஆம்!" இந்தக் காமத்துப்பாலைப் பயிலும் போது நாமே அக் காதலராகிவிடுகின்ருேம். மகிழ்ச்சியில் மகிழ்கின்ருேம், புலத்தலில் புலக்கிருேம்-ஊடலில் ஊடுகிருேம்.இரங்கலில் இரங்குகிருேம். ஆம், வள்ளுவர் நம்மை அவராக்கிப் பின் அந்தக் காதல் பாத்திரங்களாகவே ஆக்கிவிடுகிருர் . அவர் வாய்மொழி வழியே இந்த உண்மையைக் கண்டு அமைவோம். தலைவியொடு கூடி மகிழும் இன்பத்தை எண்ணி” எண்ணிப் பார்க்கிருன் தலைவன். அவளைச் சேர்ந்திருக்குங் கால் பெறும் இன்பமும் பிரியுங்கால் பெறும் துன்பமும் அவனைப் பேசவைக்கின்றன. தன் மனைவியொடு கூடிப். பெறும் இன்பத்துக்குப் பேரின்ப மோட்ச வீடும் சமமா காது என்கின்ருன் அவன். தலைவியைக் கூடக் கூடக் காணும் புதுப்புது இன்பநிலை அறிய அறிய அறியா மையே விரியும் உலக அறிவியலைப் போன்று பெருகிக்க கொண்டே போகின்றது என்கின்ருன். நெருப்பு நெருங் கில்ை சுடும். விலகினல் தண்ணென்றிருக்கும்; ஆனால், அவளிடம் உள்ள காமத் தீ அருகில் தண்ணென்றும். விலகினல் சுட்டும் கிற்கிறது எனப் பாராட்டுகின் முன்.. இப்படி இவனுடைய பாராட்டு விரிந்துகொண்டே செல் கிறது. வள்ளுவர் வாய்மொழியைத் தருகின்றேன். தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணுன் உலகு" (1103) என்றும், அறிதோறு அறியாமை கண்டற்ருல் காமம் - செறிதோறும் சேயிழை மாட்டு (1110) என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/115&oldid=812333" இலிருந்து மீள்விக்கப்பட்டது