பக்கம்:கொய்த மலர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் srسون காதல் நெறி 117 அவருக்கு கிலேத்த இன்பத்தைத் தருவது என்பது வள்ளுவர் காட்டும் இன்பப் பகுதியின் நுணுக்கங் களாகும். பிரியக் கூடாத தலைவியைப் பல காரணங்களால் தலைவன் பிரிந்து விடுகின்ருன். பிரிய மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்த தலைவனின் பிரிவு தலைவியை வாட்டுகின்றது. அவன் கொடுமையை எண்ணி கைகிருள் அவள். எனினும் அவள் நெஞ்சம் தலைவன்பால் செல்லு கிறது. ஆனல் பேதைப் பெண், வேறு வழியாக நினைக் கிருள். தன்னை விட்டுப் பிரிந்த தலைவன் தன்னை அடி யோடு மறந்துவிட்டதாகக் கருதுகிருள். அவன் நெஞ் சமும் மறந்திருக்குமென நினைக்கிருள். ஆகவே அவள் தன் நெஞ்சைப் பார்த்து, அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் என்நெஞ்சே நீ எமக்கு ஆகாதது? (1291) எனக் கேட்கின்ருள். மற்றும் அவள் நெஞ்சு அவன் பின்னல் செல்வதற்கு இரங்குகிருள். அதைப் பேதை என்றும் பழிக்கிருள். பரிந்தவர் நல்கார்என் றேங்கிப் பிரிந்தவர் பின் செல்வாய், பேதை என் நெஞ்சு (1848) என்பது குறள். பின் அவள் உள்ளம் திரும்புகிறது. எண்ணம் சிறக் கிறது. பிரிந்த காதலர் திரும்புவார் என்ற உணர்வு உண் டாகிறது. ஏன்? அவர், தன் உள்ளத்திலேயே குடி கொண்டவர் என்ற உணர்வும் பிறக்கிறது. அதனல் அன்றே அவள் வெம்மையை உண்ணவும் அஞ்சிள்ை. எனவே உள்ளத்திலிருப்பவரை விட்டு ஒடும் நெஞ்சை அழைத்து அவள் கூறும் உரை சிறந்தது. உள்ளத்தார் காதலவராக உள்ளி யார் உழை சேறிஎன் நெஞ்சு' (1249) கொ. ம. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/119&oldid=812341" இலிருந்து மீள்விக்கப்பட்டது