பக்கம்:கொய்த மலர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கொய்த மலர்கள் அது தேவைப்பட்டது. விலங்கொடு விலங்காகத் திரிந்து கண்டதைத் தின்று வாழ்ந்த அந்தப் பழம்பெருங் காலத்திலேயே அவனுக்குத் தன் உடல மறைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றிற்று. மனித உணர் வின் முதற்படியிலேயே இவ்வாடைபற்றி உணர்வு பிறந்தது. ஆனல், அக்காலத்தில் மரவுரியும், விலங்கு க்ளின் தோல்களுமே ஆடைகளாக அமைந்தன. ஆயினும் காலம் செல்லச் செல்ல அவன் பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும் பலப்பல வகையான ஆடைகளைச் செய்யக் கற்றுக் கொண்டான். இன்று அத்துறையில் அவன் மிக அதிகமாக முன்னேறி விட்டான் என்றே சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆடைநெய்யும் வழக்கமும், அதற்குப் பல்வேறு வகைப் பட்ட வண்ணங்கள் இட்டு வளம்படுத்தும் வழக்கமும் இருந்தன என நாம் காண்கின்ருேம். நாகரிக வாழ்வின் உச்சியில் வாழ்ந்த தமிழ் மக்கள், ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே நல்லநல்ல வண்ண ஆடைகள் உடுத்துச் சிறந்தனர் என்பதை நாம் இலக்கியங்கள் வழிக்காண முடிகின்றது. சங்க காலத்தில் ஆடவரும் மகளிரும் அழகழகாக ஆடைகள் புனைந்தும், விழா ஆற்றியும் சிறந்தார்கள் என்பதைக் காண்கின்ருேம். அவ்வாடைகள் கண்கவர் வண்ணங்களால் அழகுபடுத்தப் பட்டதையும் அறிகிருேம். ஆடைகள் மிக மெல்லிய இழைகளை உடையவனவாக இருந்தன. "இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம் எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ' e - (மலைபடு 361-62; எனறும, 'ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம்’ - - - (பெரும்பாண்469; எனறும,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/26&oldid=812456" இலிருந்து மீள்விக்கப்பட்டது