பக்கம்:கொய்த மலர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கொய்த மலர்கள் ' பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் என (சிலம்பு. 3, 169-172) அவர் காட்டுகின்ருர். மற்றும் பின் செங்குட்டுவனைக் கூறும்போது, அவன் சிவன் அருளால் பிறந்தவன் என்றும், வடக்கு நோக்கிச் செல்லும்போது சிவனே முன் வழி பட்டுப் பின் திருமாலே வணங்கிச் சென்ருன் என்றும் காட்டுகின்ருர். எனவே, சங்கம் மருவிய சிலப்பதிகார காலத்திலும், அரசரும் பிறரும் தமிழ் நாட்டில் சிவனையே முதற்றெய்வமாகப் போற்றி வழிபட்டார்கள் என அறிகிருேம். மணிமேகலை ஆசிரியர் புகார் நகரிலுள்ள பல்வேறு தெய்வங்களைக் காட்டுகின்ருர். வள்ளுவன் விழா அறை காதையின் அங்ககர மக்கள் செய்யும் விழாச் சிறப்புக் களைக் காட்டும்போதும், அவரவர் தெய்வங்களேக் காட்டும் போதும், துதல் விழி நாட்டத்து ஆன் முதலா பதிவாம் சகக்கக்கக் ເດເຄ ໘:/m " திவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈரு (மணிமே. 1, 54-55), எனக் காட்டிச் சிவனுக்கே ஏற்றம் தந்து போற்றுகின்ருர், எனவே, தமிழ் நாட்டில் சங்க காலத்திலும், அதை ஒட்டிய காப்பிய காலத்திலும், சைவமே சிறந்த சமயமாகி, கின்றது என்பதும், பல தெய்வங்கள் நாட்டில் இருந்தாலும் சிவனே முழுமுதல் தெய்வமாகப் போற்றப் பட்டான் என்பதும் வெளிப்படை. பழக்க வழக்கங்கள் சங்க காலத்தில் இறைவனைப் போற்றுவதற்கு மரபு. நெறி-பழக்க வழக்க முறைகள்-இருந்தன எனக் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/60&oldid=812532" இலிருந்து மீள்விக்கப்பட்டது