பக்கம்:கொய்த மலர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேர் வேண்டேன் 67 Bಾಣಾಗಿ மருத்தனுக்கு அடல்வாத ஆாமைச்சர் கண்ணுமிகு கவசமும்போல் காரியஞ் செய்து ஒழுகுவார், (திருவிளை. வாதவூரருக்கு உபதேசம் செய்த படலம், 9) ஆனர். மற்றும் இவர், கற்றறிந்தோர் ஆதலினுற் காவலற்குக் கண்போன்ற முற்றுணர்ந்த அமைச்சரினும் முதல் அமைச்ச ராய்த் திகழ்வார்’ ஆனர். இந்த நிலை மற்றவர் உள்ளத்திலே பொருமைக் கனலே மூட்டிவிட்டது. வாதவூரர் இலலையானல் அரசன் வாழ்வு இல்லை என்னும் நிலை உண்டாகவே, பிற அமைச் சர்கள் பொருமைப் பட்டனர். எனவே இவரைத் தாழ்த்த வழிகளே யெல்லாம் ஆராய்ந்து இருப்பர். வாதவூரர் தம் கடமைகளைத் தவருது செய்து அரசனுக்கு உகந்தவரானவர் போலவே அன்பு நெறியால் ஆண்டவனுக்கும் உகந்தவரானர்; அதில் சற்று வேக மாகவே சென்ருர் என்று கூறலாம். அரசனுக்குக் கண் ஆணும் கவசமுமாக இருந்து அவன் வாழ்வில் கருத்திருத் தித் தன் வாழ்வையே மறந்தார். அதே வேளையில் அரச னுடைய பொருளுக்கும் தன் பொருளுக்கும் வேறுபாடு காணவில்லே அவர்; அனைத்தும் ஆண்டவன் பணிக்கு உரி .யவை என நினைத்திருப்பார். அரசனும் ஆண்டவனிடம் மெய்யன்புடையவன் என்பதை அறிவார். அரசனும் தன் கடன் வழுவா நிலையில், கடவுட் பணியைப் போற்றும் அவரை மற்றவர் அனைவரினும் சிறந்தவராகவே கொண் அடான். எனவே, அவரையே அழைத்துக் குதிரை வாங்கி வரப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/69&oldid=812551" இலிருந்து மீள்விக்கப்பட்டது