பக்கம்:கொய்த மலர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்த் துன்பம் உன் துன்பம் 77 நீடிய பிணியால் வருந்துகின் ருர்என் நேருறக் கண்டுளம் துடித்தேன் ஈடில்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். இந்த அறிவுரை அன்று தொட்டு-தொல்காப்பியர் காலந்தொட்டு-இன்று வரை தமிழகத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. உலகின் பல பாகங்களிலும் இதே உண்மை பல்வேறு தவஞானச் செல்வர்களால் உணர்த்தப்பட்டே வருகின்றது. என்ருலும், மனிதன் அதைப் பிடித்துக் கொண்டே-மற்றவர்களுக்கும் மற்ற வைகளுக்கும் விளக்கிக் கொண்டே-தான் மட்டும் எங்கேயோ ஒடிக் கொண்டிருக்கிருன், பறக்கிருன், சந்திரனத் தாண்டியும் அவன் விண்வழி உயர உயரப் பறக்கிருன். என்ருலும் உள்ளம் எங்கோ தாழத் தாழச் சென்று கொண்டே இருக்கிறது. இதை எண்ணிப் பார்ப் பின் உணர்வான். எண்ணவும் அவன் விரும்ப வில்லை. வள்ளலார் எண்ணச் சொல்லுகிருர். எண்ணி உண்மை யில் உள்ளத்து ஒளி பெறின் அவன் மனிதவைான். அங் காள் எங்காளோ? புற இருளையும் அக இருளையும் ஒருங்கே போக்கி மனிதனே மனிதனுக வாழவைக்க இப் பூசப் பெரு காள் வழி காட்டுவதாக! • * வாழ்க அறநெறி! வளர்க சமரச உணர்வு!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/79&oldid=812573" இலிருந்து மீள்விக்கப்பட்டது