பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

 ஏறிப்போய்க் குழந்தைகளைத் தேடிப் பிடிக்க வேண்டுமென்றும் ஆணையிட்டான். "உடனே புறப்படுங்கள். பரிசலை வேகமாகச் செலுத்தி அந்தப் பயல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களோடு கொல்லிமலைக்கு அப்பால் உள்ள நமது தச்சுப்பட்டறைக்கு வந்து சேருங்கள். அங்கேயே அவர்களைப் பத்திரமாக யார் கண்ணிலும் படாமல் வைத்திருங்கள். ஜாக்கிரதை” என்று சொல்லி அவர்களை விரட்டி அனுப்பினான்.


9

“ம்... துடுப்பை வேகமாகப் போடுடா! எப்படியாவது அந்தப் பசங்க செல்லும் பரிசலைப் பிடித்துவிட வேண்டும்" என்றான் ஒருவன்.

"இந்தத் தாழிவயிறனால் நமக்கு இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்கிறது. தாழிவயிறா, நீயும் துடுப்புப் போடடா!" என்றான் மற்றவன்.