உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

அண்ணன் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே !

தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும்போதெல்லாம், நான் வரவு—செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன்—மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக்காட்டத்தான்.

எந்தத் தூற்றலையும் தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.

எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன்— நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.

மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டு விடாதே—நான் அப்படி!—என்ன செய்யலாம்!! கதையைக்கேளேன்—கருத்து இருக்கிறது.

ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம்—ஒரு நாள் காலை அந்த ஊர் மக்களிலே, பலர், காலை வெயிலில் உலவிக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு, காலை வெயில், பித்தம் உண்டாக்கும். இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும், நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம்; என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்தும் பெட்டிகளுடன், மாலை, வந்தானாம். வந்ததும், மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம்