21
கவலை கொள்ளவில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக்கூடாது—பேரம் பேசுவது —குறைத்துக் கேட்பது—சாயலைக் கேட்பது—இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு வேண்டுமானால் காரியவாதி பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில் ! இதை வெறி என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை ! இப்படிச் சிலர், நாளைக்கும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும் பரவாயில்லை ! இலட்சியம் நமக்கு ! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர். இலட்சியவாதிகளாகார்—என்று, நான் படித்த ஏடுகள் கூறுகின்றன !
இந்த நம்பிக்கையுடனே தான் தோழர் சம்பத் லால் குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினர் ஆக்கினார்.
அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன் என்று பேச வைத்தது.
தோழர் சம்பத், நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்துவைத்திருக்கிறது. அது இது:
இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்ச்செல்வம் அவர்கள் தலைமையில் நடை-