26
களை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம், செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப் பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.
"இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமயமுதல் குமரிவரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழிக்துக் கொண்டிருக்கிறது.
"இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்கவேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும் கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்கவேண்டும்.
"ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில் சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறிகொடுக்கும், கொள்ளை கொடுக்கும் ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும் திராவிடநாடு விடுதலையைத்தான் மருந்தாகச் காட்டுகின்றன.