51
பார்க்கிறோமே ! என்றோ ஓர் நாள் என்னவோ நினைப்பில், ஏதோ, சொல்லிவிட்டேன், என்று கூறுவாரோ, என்று எண்ணுகிறாய். தம்பி ! இந்த அறைகூவல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல !!
அமைச்சர் வெங்கட்ராமன், பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன்—உடனே விடக்கூடாது ! அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குக் தோன்றவில்லை. தோழர் சம்பத்து அப்படியா ? விடுவாரா ? எடுத்தார் பேனா, தொடுத்தார் அறைகூவல் என்ன நடந்தது என்கிறாயா ? அமைச்சர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயம் அமைச்சர் வெங்கட்ராமனுக்கு 'ஆருடம்' தெரியுமோ, என்னவோ ! இவ்வளவு வீர தீரமாகப் பேசும் இந்த இலைஞர், எண்ணி மூன்றே ஆண்டுகளில், திராவிடநாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறிது விறுவிறுப்புப் பேச்சு ; இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ !
தம்பி ! இப்படி யெல்லாம், அறைகூவல் விடுவது—அடித்துப் பேசுவது—பரணி பாடுவது—முரசொலிப்பது—போன்றவைகளில் நான் ஈடுபடாததைத்தான் மிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள் ! இப்போது விளங்குகிறதல்லவா, போலி அதி தீவிரவாதம், என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற உண்மை ?
திராவிடநாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட்டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு—இல்லை—காங்கிரஸ் மணிமாடம் செல்ல—வழிவிடு ! வழிவிடு ! என்று பலரும் கூறுவர் ; வரவேற்பர் ! பித்தம் தெளிந்த நிலை என்-