53
மன்ற நடவடிக்கை ஏடுகளிலே இருந்து தான் ! இன்னும் கூட இருக்கிறதே, நிரம்ப' என்றேன். அவர் கோபித்துக் கொள்ளவில்லை; மாறாக, அந்தக் கருத்துக்களைத் தான் இப்போது வலியுறுத்த முடியாதபடி அமைச்சர் பதவி தடுக்கிறது என்பதைப் பார்வையால் காட்டினார்.
ஆக, நான் அமைச்சரைப் பார்க்கும்போது, அவருக்குத் தான், கூச்சமாக இருந்தது—வெறும் உறுப்பினராக இருந்த போது, தொழிலாளர் உரிமைக்காக, வீரதீரமாகப் பேசினோம், இப்போது இப்படி ஆகிவிட்டோமே !—என்ற கவலையும், வெட்கமும்தான் அவரைப் பிய்த்துத்தின்றது.
திராவிடநாடு பிரச்சினையை வைத்துத் தேர்தலே நடத்தி விடுவோம்; நான் தயார் ! நீங்கள் எப்படி ? என்று அறைகூவல் விடுத்தவர், திராவிடநாடு பகற்கனவு என்று ஏசும் நிலை அடைந்த கோலத்தில், அமைச்சர் அவரைக் காண நேட்டால் ! பரிதாபமாகத்தான் இருக்கிறது, நினைக்கும்போதே !!
1958 ஜனவரி 28-ல் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில், அமைச்சர் வெங்கட்ராமன் பேசிய பேச்சுக்குத் தோழர் சம்பத் விடுத்த அறைகூவல் அறிக்கையுடன், 1961 ஏப்ரல் 19-ல் திராவிடநாடு பகற்கனவு என்று அவர் அவருடைய உலகுக்கு விடுத்துள்ள அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால்.....! சே ! எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது ! அந்தச் சிவாஜியா, நான்...? நினைவிருக்கிறதல்லவா, தோழர் சம்பத் சிவாஜி வேடத்தில் பேசிய உருக்கமான வாசகங்கள் !!
“அஞ்சா நெஞ்சன் எங்கே ? பஞ்சையிடம் பணியப் போகும் நான் எங்கே ?......வீழ்ச்சிதான் ! வேதனைதான் !