இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
56. கவிதைக் குமரி.
செஞ்சொல்லே பஞ்சுடலாய்ச் செழும்யாப்பே
உயிரதுவாய், அஞ்சுவையும் அருநயமும் அழகாடை மேகலையாய்ப்
பொன்னன்ன நுண்பொருளே பெண்மைகொள்
கன்னிமையாய்த் துன்னுஞ்சொல் பொருளணியே துலங்குகின்ற
- அணிகலனாய்க் கொஞ்சுமொழி பண்ணதுவாய்க் கொள்கவிதைப்
s பெயர்கொண்டென் நெஞ்சமெனும் கலையரங்கில் நிலைத்தாடும் குமரீ,கேள்! - தரவு
சொல்லடுக்கி வரியமைத்துச்
சொல்லிடுவார் நீ, என்றே: கல்லடுக்கும் கொத்தன்செய்
கலையறிந்தார் இவர்சில்லோர்.
உள்ளுணர்வைப் பிறமொழிகொண்
டுருச்சமைத்தே நீ,என்பார்; கள்ளுண்போன் நஞ்சுண்ணும்
கழிசெயல்கொள் இவர்சில்லோர்.
237