இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தோழி:
பூக்கின்ற மூக்கதும் அப்படியாய்-பொன்னே
பூரித்த மகரந் தப்பொடியாய், மூக்குப் பொடியதை முங்குவதும் - அஃதே
முதிர்ந்த தேனெனத் தொங்குவதும் நோக்கியே கூறினள். செல்லிவண்டே-இதனை
நோக்காதே இவ்வண்டு செல்லுகண்டே 78
கவிக் கூற்று சென்றான் கிழவன் சிலசெய்து வந்திங்கு நின்றான் புகன்றான் நினைப்பு:
(குறள் வெண்பா] 79 கிழவன்:
அலர்ந்த பற்களை அழித்திட்டேன்;-உடனே
அறவே புருவம் மழித்திட்டேன்; உலர்ந்த காதலாய்ப் போகாமல்-தோழி!
உணரக் கூட்டுவாய் நோகாமல்!
தோழி:
கிளர்ந்த பற்களைக் கொட்டிவிட்டீர்;-வில்லைக்
கிட்டிய புருவம் வெட்டிவிட்டீர்; தளர்ந்த தொந்தியைத் தள்ளிடிலே-இந்தத்
சிலையினை அள்ளிடலாம். 0
8
53