பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 25 26 208 மன்னரின் வரவேற்பு மைந்தரைத்தாம் வரவேற்க மன்னர் தேரில் மாண்புடனே அமர்ந்துநனி மகிழ்ந்து நோக்க, எந்தையையாம் காண்பமென மக்கள் ஈண்ட, எவ்விடத்தும் எள்விழவும் இடமே இல்லை. (வேறு) ஆற்றச் சிரைத்த தலையுடனே - கூட அளவில் துறவியர் சூழ்ந்துவர ஊற்றமார் உள்ள உறுதியொடு - புத்தர் உயர்ந்த நகரை உறலானார். காவிக் கடலில் கதிரவன்போல் - ஐயர் காவி உடைஅணிந் தோர் நடுவே மேவி வருவதைக் கண்டதுமே - மன்னர் மிக்க உணர்ச்சி அடையலுற்றார். மைந்தர் உறவை மறந்துவிட்டுப் பெரு மலைநிகர் தேரின் இறங்கிவந்து தந்தை சுத் தோதனர், தண்ணருளார் - தம் தனயனேக் கண்ணுறத் தாவினரே. தண்அருள் மகன். 24 எந்தையை - எம்தந்தை போன்ற புத்தரை, ஈண்ட - திரள. 25 ஆற்ற - மிகவும் மழுங்க, ஊற்றம் - ஆற்றல், வலிமை, 26 காவிக்கடல் - காவி நிறக்கடல். காவி நிறக் கடலில் ஞாயிறு தோன்றுவதில்லை; ஆதலின், ‘இல் பொருள் உவமை அணி ஆகும். (செங்கடலை இங்கே 27 மலைநிகர் - மல்ே போன்ற ; விட்டுவிடுக). 姊 தேரின் - தேரிலிருந்து ; ஆர் - குளிர்ந்த அருள் மிக்க; தனயன் - 209 சென்றமுற் கால நினைவுவர - வேந்த்ர் சித்தார்த்தா என்றே அழைத்திடவும். நன்றே கருதித்தம் நாவெடுக்கப் பின்அது நல்லதன் றென்றே அட்க்கிவிட்ட்ார்.” மன்னரும் மக்களும் போற்றிடவே - புத்தர் மழைபோல் அறவுரை பெய்திட்டார். பின்னர்ப் பொழிலுறு மண்டபம்போப்ப். பல பிக்குகள் சூழ்ந்திடத் தங்கினாரே. மற்றைநாள் காலை திருவோடு - கையில் மன்ன மறுகின் நடுப்போந்து பெற்றிட உண்டி பெரிதிரந்தார் - மக்கள் பேசொனாத் துன்பொடு கண்டனரே. 31 ஊண்டர மங்கையர் போட்டியிட்டு - நல்ல உணவு கொணர்ந்து நிரப்பினரே. வேண்டா அழுகை யிடையேதான் - இந்த வெறுப்பு நிகழ்ச்சி நடந்ததுவே. 32 கண்ணிர்க் கடலின் நடுநின்று - இந்தக் காணொணாக் காட்சியைக் கண்டசிலர் மன்னர் அறிந்திடச் செய்ததனால் - அவர் மைந்தனைக் கண்டிட ஓடிவந்தார் ੋ– SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - ● ~. 麓 28 முற்கால நினைவு - சித்தார்த்தன் அரண்மனையில் இருந்த காலத்து நினைவு. 29 பொழில் - சோலை; பிக்குகள் புத்த சமயத் துறவியர்.30 மற்றை நாள் - மறு நாள்; |பெரிது இரந்தார் - பெருந் தன்ழையோடு பிச்சை கேட் டார்; பேசஒனா - பேசஒண்ணா - சொல்லமுடியாத, 31 இளண்டர - ஊண்தர வேண்டா அழுகை - விருப்ப மிேல்லாததனால் உண்டான அழுகை. 32 அவர்- மன்னர் . – 14