இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனைகள் - தொகுதி : ஒன்று
153
னென்றால், நாடக கதையாதாரப்படி பொய்யல்லவா? ஊன்றிப் பாருங்கள். சுயமரியாதையற்ற இந்துக்களையும் பறையர்களையும் வெள்ளென வெளுத்திருக்கும் இவ்வரிச்சந்திரன் கதையில் தங்கள் புத்தியை மயக்கிக்கொள்வதன்றி வேறில்லை. இக்கட்டுக்கதைகள் வேஷ பிராமணத்தை விருத்திச் செய்வதற்கே உண்டாக்கப்பட்டதாகும். யாவரேனு மிவ்வரிச் சந்திர புராணம் மெய்யென்றே வெளிவருவாராயின் உள்ள பொய்கள் ஒவ்வொன்றையும் தெள்ளற விளக்கிக் காட்டுவாம்.