பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

க. அயோத்திதாஸப் பண்டிதர்



அடை யாளமா? பாஷையம்.. யாளமா? அப்படிக் கொன்றும் நிர்ணயித்து வைத்திருக்கவில்லை ஆதல் பற்றி இக்காலத்தில் பிராமணனே தேவையில்லை. எல்லாரும் பிராமணர்தான். எல்லாரும் சூத்திரர்தான் என்று வாழ்தலே மேலாகும் சிறிது காலங்களுக்கு முன்னர், பவுத்தத்திலும் பிராமணர்கள் இருந்ததாக பல கதைகள் எழுதி காட்டுவார்கள் அது உண்மையில் ஏற்றுக் கொள்ளப்படாததே பிராமணத்திற்கும் பவுத்தத்திற்கும், சம்பந்தமே கிடையாது. பவுத்தம் உலக சீர்திருத்த தர்மமாகும். அதற்கு ஜாதி, மதம், வேதம், ஆசாரம் முதலியன கிடையாது. ஆரிய வேஷபிராமணர்களே தங்கள் ஜீவன விர்த்திக்காகப் படைத்து கொண்ட பொய்க் கடவுளர்களையும், மதங்களையும் பவுத்தத்தோடு சேர்த்து புத்தரும் எங்கள் தெய்வமென்று சொல்லி இந்தியாவைக் கெடுத்துவிட்டார்கள். இந்து மதமே பிராமண மதம். ஆனால், நம்மை நெடு நாளாக ஏமாற்றி வருகிற பிராமண கொள்கை, மிகத் தந்திரமானது. அதின் லக்ஷணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந்தியா என்னும் பெரிய மரமாகும் அம்மரத்திற்கு கடவுள் மதம் வேதம் ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளை நடுவில் இந்து என்னும் கூடு கட்டியுள்ளது. அக்கூட்டில் மும்மூர்த்தி மதமென் னும் கல் முட்டை இட்டு. அதைப்பார்ப்பார் என்னும் கழுகு அடைக்காத்துள்ளது. தனது கல் முட்டையை பொன் முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும், காதால் கேட்டும், மனதிலுணர்ந்தும், கவலையற்றிருக்கின்றோம். ஆராய்ச்சி என்னும், கல்லெறிந்து கழுகைத் துரத்தாமலும், சுயசமதர்ம மென்னும் வாள் கொண்டு மரத்தை வெட்டி கூட்டை வீழ்த்தாமலும், பவுத்தம் என்னும் சஞ்சீவியை அக்கன் முட்டைமேல் பிரயோகித்து முட்டையை உடைத்து உண்மை அறிதற்கின்றி, மவுனஞ் சாதித்து சாகின் றோம். இவ்வித ஞாய விரிவை எடுத்துரைக்கும் பவுத்தர்களை நிந்திப்பதல்லாமல் சிந்திப்பதில்லை. பிராமணர் அல்லாதவர் களால் எழுதப்பட்டுள்ள பிராமணத்துவத்தைத்தான் யாதார்த்த பிராமண வேதாந்த விவர மென்று நாம் சொல்கின்றோம். பிராமண மதத்தார்களே எழுதிவைத்துள்ள பிராமணத்துவத்தை, வேஷ பிராமண வேதாந்த விவரமென்று இழிவுபடுத்து