பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r; சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 33 லளித்த வெற்றி ஞான நூலும் கொடுத்து சிறையிலிருந்து விடுவித்தவன் நாட்டுக்கனுப்பின்ை. ஒளவையாரால் அருளிய முதல் வாசகம் ஆத்திச்சுவட்டில், இரண்டாம் வாசகம் குன்றைவேந்தன். ஆகிய இவ்விரண்டும், அக்காலத்தில் சிறு பிள்ளைகட்டு கற்பிக்கப்பட்டு வந்ததுடன் இந்த வெற்றி ஞானத்தையும் பள்ளிப்பிள்ளைகட்கு கற்பிக்கும்படி சயம்பு வரசன் சமனசிரியர்களை G. க்கொண்டான். அது முதல் மூன்று நூற்களையுஞ் சேர்த்து திரிவாசகம் என்று அக்காலத்திலேயே வழங்கிவந்தார்கள், திரிவாசக முண்டாய தற்கு காரண மிதுவேயாகும். இக்காதையை கிறிஸ்து பிறந்த (95) தொண்ணுாற்றியைந்தாம் வருஷம் அரசாண்ட கிள்ளிவளவன் மூதாதை வம்ஸ் வரிசையிற் காணலாம். இக்காலத்தில் முதல் வாசகமும் இரண்டாம் வாசகமும் அம்பிகையம்மன லியற்றியதென்றும், மூன்ரும் வாசகமாகிய இந்த வெற்றி ஞானம் அதிவீரராமபாண்டியன் எழுதிய் தென்றும், பல பிழைபடு நெறிகளை நிறைத்து பாழாக்கி விட்டார்கள். பூர். சித்தார்த்தா புத்தக சாலையார்