பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 27 மதத்திற் பொலிவும் வடசொற் கிடப்பும் தமிழ் மரபு முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமுமோங்கு வினை பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்க பன்னுருயிரம் விதத்திற் போலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே. சிலப்பதிகாரம். தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு முன்கலதிவாகரம். ஒருவர்க் கொருவகிை யுதவியும் பரிசின் மாக்கள் பற்பலராயினும் தானுெருவன்னே தரணி மாதவன் செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரம். சிவஞான யோகிஸ்வரர். இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியு மான்றவரே தழி இயின ரென்ரு லிவ் இருமொழியு நிகரென்று மிதற்கைய முளதேயோ. இத்தகைய விலக்கிய நூல் இலக்கண நூாற்களின தாரங் களைக் கொண்டு தமிழட்சரங்களை இயற்றியளித்தவர் புத்தபிரா னென்றே தெளிவாக விளங்குகிறபடியால் எழுத்தறிவித்தவன் சிறப்பைக் கூறி அன்னேர் தன்மத்தை விளக்கலுற்ருள். 2. கல்விக்கழகு கசடறமொழிதல். தான் கற்ற கல்விக்கு சிறப்பு யாதெனில், கூறும் வாக்கில் குற்றமெ ழாமலும், மற்றவர்களிதயம் புண்படாமலும் முன்பின் யோசித்து பேசவேண்டுமென்பது கருத்து. 3. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல். திரவிய சம்பத்தைப் பெற்றவர்களுக்கு சிறப்பு யாதெனில், தனது குடும்பம் ஒங்கி செழிக்கவும், தன்னை யடுத்தோர் குடும்பம் ஒங்கி செழிக்கவும் அன்புடன் உதவி புரிந்து வருவாயிைன் அதுவே தனவந்தன் அழகென்பது கருத்து.