பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

] Ꮾ 0 க. அயோத்திதாஸப் பண்டிதர் அதிபதிகளிடங் கொடுத்து அன்னதானம் வஸ்திரதானங்கள் செய்தும், தன் மனதைக் காக்காமல் போனப்போக்கில் விட்டு ஒருவரைக்கெடுத்தும் வஞ்சித்துங் காமவெகுளி மயக்கங்களைப் பெருக்கியுஞ் செய்த தீங்குகளில்ை தனக்குண்டாய தீவினைகளை யுனர்ந்து வஞ்சத்தால் பொஞ்சித்தப் பொருட்களை வியாரத்துட் கொண்டு வந்து பிட்சுனி யதிபர்களிடமளித்து முப்பத்திரண் டறங்களையும் பரவச்செய்து வந்தார்கள். இத்தகைய தன்மராச்சிய நிறைவில் குறைவுதோன்றி கொள்ளைநோய் கண்டு பால பருவமுற்றப் பெண்களேனும் பிள்ளைகளேனும் பிராணுவ ஸ்தையி லிருக்குங்கால் தாய் தந்தையர்கள் ஆண்பிள்ளை யதி யவஸ்தையி லிருக்குமாயின் அரசமரத்தடியிலிருந்து அருளறம் விளக்கிய ஆதிதேவனைச் சிந்தித்து குழவி சுகமுற்றவுடன் துவராடை யணிந்து ஆண்ட வனுக் கடிமையென்று ஆண்பிள்ளைகள் மடத்திற் சேர்த்து விடுவதும், பெண்பிள்ளை யதி யவஸ்தையி விருக்குமாயின் வேம்பு மரத்தடியிலிருந்து வேதவாக்கியங்கள் மூன்றையும் விளக்கிய விண்ணவர் முதல்வியை வணங்கிக் குழவி சுகமுற்ற வுடன் மஞ்சள் சரட்டை கழுத்தில் கட்டி மஞ்சளாடையுடுத்தி அம்மனுக் கடிமையென்று பெண்கள் வியாரத்தில் விடுத்து ஞான சாதன மடையும்படிச் செய்து, அச்சுதிருவென்றும், அம்மன் விழாவென்றுங் கொண்டாடி நீதிமார்க்கத்தை நிலைபெறச் செய்து வந்தார்கள். உள்ளத்துண்டா மூழதுகண்டோர் கள்ளத்துண்டக் கைப்பொருள்கொண்டும் அங்கங்கொண்ட வகவினைகண்டோர் துங்கங்கண்ட தூளிலுருண்டும் கலகமுண்டுக் காவாநாவில் அலகுமிட்டே வம்மைகாவ லூருள்ளாயி தீபங்கண்டும் பேருள்வேலின் கண்ணிவியாரம் போற்றியம்மை பொன்னடி வணங்கி யேற்றியெண்ணன் கறமதுமுந்தை உண்டி யீய்ந்து முயிரையோம்பர் பண்டைகாலப் பாங்கென்றெண்ணி