பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சங்ககாலச் சான்றோர்கள்


பால்கொண்ட வஞ்சம் தீர்க்கத் துணையாகப் படை திரட்டி வந்த சேரன் கொடுமதியை-இறுமாப்பை-நினைந்தான் அதியன் ; எரிமலை போலக் கொதித்தான். கண்களில் சினத்திக்கனன்றது. நெடுநாள் பசித்திருந்த வாள் வரி வேங்கையென கேரார் படை கிழித்து அவர் நெஞ்சைப் பிளக்கப் பாய்ந்தான் ; எதிர்த்து வந்த மள்ளரையும் களிறுகளையும் இரு கூருக்கினான். அதியனது ஆற்றுக்குச் சினத்திக் கண்ட மழவர் கூட்டம், விண்ணதிர முழங்கி, அடுபோர் உடற்றியது; காற்றென வந்த அம்புகளை எல்லாம் தடுத்து நிறுத்தி மழையெனக் கணை களைப் பொழிந்தது. இரு திறத்திலும் பேயும் அஞ்சப் பெரும் போர் நிகழ்ந்தது. மாவும் களிறும் குருதி வெள்ளத்தில் மிதந்தன. வைத்த கண் வாங்காது வாள் வீரரும் வேல் வீரரும் அருஞ்சமர் புரிந்தனர். அதியமானும் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் நின்று பெரும்போர் புரிந்தான். அவன் உடல் முழுதும் மாற்றாளின் கண்களால் துளைபட்டது. அத்துளைகளினின்றும் செந்நீர் அருவி போலப் பெருக்கெடுத்தது. அது கண்ட ஒளவையாரின் அன்புள்ளம் . கொதித்தது. அவர், பெருந்தகாய், பெருஞ்சமர் புரிந்து நீ விழுப்புண் தாங்கியமையால், உன் ைேடு மாறு கொண்ட மன்னர், களத்தில் சாவாமையால் உளதாகும் குற்றம் ஒழியும்படியும் பிற்காலத்தில் நோயால் இறந்த தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்தலினின்று தப்பியும் உய்ந்தனர். இப்போது உன் வாட்போரில் பலர் மாண்டனர். இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது?’ என மேலும் அவனை ஊக்கினார். அதியமானும் உடலெனக்கு ஒரு சுமை, எனக் கருதிய வனாய்த் தன் ஆற்றலெல்லாம் காட்டிச் சமர் புரிந்தான். அந்நிலையில் கூர்வேலொன்று கடுகி வந்து அவன் பேரித