பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடவர் நிலை

73



நின்று, ஒருவர்க்கொருவர் முதுகு தொடாமல், கையாற் குத்தியும், படைக் கலங்களாலே வெட்டியும், ஒருவர் உடம்புடன் ஒருவருடம்பு தாக்கும்படி கலந்து பொருதார்கள் என்னும் செய்தி பட்டினப்பாலையிற் கூறப்பட்டுள்ள்து.

இவ்வாறு இளமைப் பருவத்திலேயே கல்விப்பயிற்சியும் போர்ப்பயிற்சியும் வாய்க்கப் பெற்ற குடும்பமானது எத்தகைய இன்னல்களாலும் சிதையாது வளரும் சிறப்புடையதாகும். குடும்பத்தைப் பாதுகாத்தற்குரிய நல்ல ஆண்மக்களைப் 'பொன்போற்புதல்வர்' எனச் சான்றோர் பாராட்டுவர். அதனால், புதல்வர்களைப் பெறாதவர் நாட்டுக்குச் செய்யவேண்டிய கடமையினைச் செய்யாதவராகவே கருதப்பட்டனர். புதல்வரைப் பெறாதவருடன் வீரர்கள் போர்செய்வது கூடாதென்பது தமிழ் நாட்டுப் போரறமாகும். தம் முன்னோர் தொடங்கிய நற்செய்கைகளைத் தமக்குப் பின்னும் தொடர்ந்து செய்தற்குரியவர்கள் தம் புதல்வர்களும், அவர்கள் வழிப் பிறக்கும் பேரர் முதலியவருமாவர். ஆண் மக்களைப் பெற்றவர்களே தங்கள் முன்னோர்க்குரிய விருப்பத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றியவர்களாவார்கள். புதல்வர்ப் பேறு வாய்க்கப் பெறாதார், தமக்குப் பின் முன்னோர் வினைகளைத் தொடர்ந்து முடித்தற்குரிய சந்ததி இல்லாமையால், தம் கடமையினை நிறைவேற்றாதவராகவே கருதப்பட்டனர்.

தம் குடும்பத்தையும் நாட்டையும் காத்தற்பொருட்டுத் தம்முயிர் கொடுத்துச் செய்தற்குரிய ஆண்மைத் திறத்தைத் தம் வழியினர் பெறுதல் வேண்டுமென்பது தமிழ்க்குடியிற்றோன்றி மறைந்த முன்னோர்களின் விருப்பமாகும். முன்னோர் விரும்பிய இவ்விருப்பத்தினை