கரிகாற் பெருவளத்தான்் 43
'தெள்ளருவிச்
சென்னிப் புவியேறிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் காை கண்ட பூபதி.'
(விக்கிரம சோழன் உலா: உச-சு) 'தலையேறு
மண்கொண்ட பொன்னிக் காைகட்ட வாராதான்் கண்கொண்ட சென்னிக் கரிகாலன்.?
(குலோத்துங்கச் சோழன் உலா : உச-சு) 'தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திடா முகரியைப் படத்து எழுது கென்று கண்டு, இது மிகைக்கண் என்று இங்கழிக்கவே அங்கழிந்ததும்.”
(கலிங்கத்துப்பாணி : க.அச) 'முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்த தறிவோம் ; இருபுறமு மொக்ககின தொருபுலி பொறிக்க வட
இமகிரி திரித்த கறிவோம் ; இகல்முகரி முக்கணிலு மொருகண் இழி யக்கிழியில்
எழுதுகண் அழித்த கறிவோம்.”
(குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்: இங்) நவ சோழ சரிதம் என்ற தெலுங்கு வீரசைவ நூல், * ஒரு நாள் கரிகாலன் காவிரியாற்றை அடுத்த காட்டில் வேட்டையாடிக் களையாறச் சிறிது நேரம் காவிரிக் கரை யில் தங்கின்ை அப் போழ்து, காவிரியின் இரு மருங்கும் கரை அமைத்து நீரைத் தேக்கினல் சோழ நாட்டு வளம் பெருகும் என்ற எண்ணம் அவன் உளத்தே உருப்பெற் றது ; உடனே, தன் ஆணைக்கு அடங்கிய அரசர் அனேவ ாையும் காவிரிக்குக் கரை அமைக்குமாறு பணித்தான்்; முக்கண்டி சோழன், பாஸ்கா சோழன் என்ற இருவர் நீங்க ஏனேயரசர் அனைவரும் பணியை ஏற்று நடத்தினர்; வாராத அவ்விருவர் மீது, கரிகாலன் படையொடு சென்று அவரை வென்று கைப்பற்றிக் கொணர்ந்து, கசையமைப்பு முடியும்வரை கடுந் தொழிலாற்றச் செய்தான்் கரிகாலன்' என்ற வரலாற்றைக் கூறுகிறது.