எயினந்தை மகனார் இளங்கீரனார்
101
ஆகம் அடைதந் தோளே; அதுகண்டு
ஈர்மட் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே.”
அவள் துயர்நிலை கண்ட அவன், அன்று போதலைக் கைவிட்டான் எனினும், கடமை உணர்ச்சி உடைய அவன், பொருள் தேடிப் போதலை அறவே கைவிட்டானல்லன்; பின்னொருகால் போகவே துணிந்துவிட்டான்; துணிந்த அவன் அவளை அருகழைத்து, அன்புரை பல வழங்கி இறுதியில் தன் கருத்தினை உணர்த்தினான்; கேட்ட அக்கணமே அன்று அலர்ந்த தாமரை போன்றிருந்த அவள் அழகிய முகம், விடியற்காலத்தே தோன்றும். வெண்மதி வெளிறித் தோன்றுவதுபோல் வெளுத்து ஒளிகுன்றிவிட்டது; அவள் உடல் அழகும் குறைந்துவிட்டது; முகம் கவிழ்ந்துவிட்டது; செயலற்ற அவள் கால்விரல்கள் அவளை அறியாமலே நிலத்தைக் கிளைக்கத் தொடங்கின; கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டன்; அக்கண்ணீர் அவள் ஆகத்தை அறவே நனைத்துவிட்டது; கால்கள் நிற்க மாட்டர்வாய் நிலை கலங்கின; கழிபெரும் துயருடையளாயினாள்; அவன் பிரிவைப்பொறாது இவ்வாறு பெருந்துயர் உறும் அவள் உள்ளம், அவன் பிரிந்து செல்ல வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்துள்ளது; ஆதலின், பிரியும் அவன் முன் தன் கலங்கிய நிலையோடு சேறல், அவன் செலவு முயற்சிக்குக் கேடு தரும் என உணர்ந்தாள்; கலங்கிய தன் முகத்தைத் தன் கருகி தன் கூந்தலால் மறைத்து நின்றாள். சென்று, நன்றே வினைமுடித்து வீறு எய்துக என வாழ்த்த எண்ணுகிறது. அவள் உள்ளம்; ஆனால், அவன் பிரிவுத் துயர், அவ்வுரையினை உரைக்கா வண்ணம் நாவைத் தடைசெய்கிறது; எவ்வாறோ, நடுங்கிய அக்நாக்கினின்றும், அப்பொருள் தோன்றும் சொற்கள் வெளிவந்துவிட்டன; வாழ்த்தி விடை தந்துவிட்டாள்; அந்நிலையில் அவள் விட்ட பெருமூச்சு, அப்பிரிவால் அவள்