பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. அஞ்சி

சேலம் மாவட்டத்துத் தர்மபுரி, பண்டு தகடூர் எனும் பெயர்கொண்டு விளங்கிற்று; தகடூரைத் தலைநகராகக் கொண்டு, சேலம் மாவட்டத்தின் வட பகுதியை ஆண்டு வந்தனர் அதியர் என்ற குறுநில அரசர்கள். அவ்வதியர் சேர மரபினரோடு உறவுடையவர்; அதனால், "போந்தை, வேம்பே, ஆர் எனவரூஉம் மா பெருந்தானை மலைந்தபூவும்” எனக் கூறியவாறு, அச்சேரர்க்கு உரித்தெனப்பட்ட பனந் தோட்டையே இவர்களும் மாலையாகப் பெற்றிருந்தனர்; கொல்லிக் கூற்றமும், குதிரை மலையும் இவர்க்கு உரியவாய் இருந்தன. கி. பி. இரண்டாம் நாற்றாண்டு எனப்படும் சங்ககாலத்தே வாழ்ந்த இவர்கள், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர் களுக்குத் துணைவர்களாக விளங்கினர் என அறியப்படுத லால், இவர்களும் மூவேந்தர்களைப் போன்றே நெடி தாண்ட பெருமரபினர் என்பது புலனாம்; பெறற்கரும் பெருமை வாய்ந்த கரும்பைப் பிற நாட்டினின்றும் முதற்கண் இவன் கொணர்ந்த பெருமை, இவ்வதியர்க்கே உரித்து எனப் புலவர்கள் பாராட்டுவர் :

"அமரர்ப் பணியும் ஆவுதி அருத்தியும்

அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும் 
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர்." (புறம் : கூக்) 

தகடூர், போரிடை வெற்றியல்லது தோல்வி காணாப் பேராண்மையொன்றையே பெறற்கரும் பேறாகக் கருதும் வீரர் பலர் வில்லேந்திக் காத்து நிற்கும் காவற் காட்டான் சூழப்பெற்து; அந்நகருள் அரசர் புகழ் பாடிவரும் இரவலர் நுழைதல் இயலுமேயல்லால், பகைகொண்டு வருவார் எவரும் கனவிலும் நுழைய நினையார் ; அத்துணைக் காவல் அமைந்தது அந்நகர்; காட்டிற் சென்று மேயும் ஆனிரைகள், ஆங்கே தமக்கு ஊறுசெய்யும் பகை விலங்கு