பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சங்க இலக்கியத்

மஞ்சரி : கலப்பு மஞ்சரி, நுனி வளர் பூந்துணராகத் தோன்றும்.
மலர் : பல பாலானவை. கருஞ்சிவப்பு நிறம்.
புல்லி வட்டம் : 5 சிறு பற்கள் போன்ற புல்லிகள் தட்டையானவை. முதிர்ந்தவுடன உதிர்ந்து விடும்.
அல்லி வட்டம் : 5 திருகு இதழமைப்பில் விரிந்திருக்கும் மிகச் சிறிய இதழ்கள். 4-6 வரையில் இருப்பதுமுண்டு.
வட்டத் தண்டு : வட்டத் தண்டு குட்டையானது
மகரந்த வட்டம் : 10-12 மகரந்தத் தாள்கள் சிலவற்றில் நிறைவின்றியுமிருக்கும்; வட்டத் தண்டினைச் சுற்றிச் செருகப்பட்டிருக்கும்.
மகரந்தத் தாள் : மகரந்தத் தாள்களின் அடிப்புறம் விரிவடைந்து இருக்கும். விளிம்பிலும் முகப்பகுதியிலும் விரல்கள் போலிருக்கும். மேற்புறம் மென்மையானவை.
மகரந்தப் பை : மெலிந்து நீள் சதுரமாயிருக்கும்
சூலக வட்டம் : சூற்பை நீள் சதுரமானது, 5-6 அறைகளை உடையது. நீளத்தில் ஓர் அறையுடன் இருக்கும் சூல்தண்டு இல்லை. சூல்முடி நீள் சதுரமானது.
சூல் : எண்ணற்றவை. பல அடுக்குகளில் உட்சுவரில் ஒட்டிய சூல் ஒட்டு முறையில் திரண்டிருககும்.
கனி : பெரிய உருண்டை வடிவான (அ) முட்டை வடிவான சதைக்கனி, ஒவ்வோர் அறையும் பல விதைகளுடன் இருக்கும்; ஓடு வழவழப்பாயும், மரக் கட்டை போலும் இருக்கும்.
விதைகள் : எண்ணற்றவை. மணமுள்ள சதைப் பற்றில் காணப்படும். நீள் சதுரமானவை. அமுங்கியிருக்கும்: முளை சூழ் தசையில்லை.