பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

157

“செடிகொள் வான் பொழில் சூழ்
 திருப்பெருந்துறையில்
 செழுமலர்க் குருந்தம் மேவிய
 அடிகளே அடியேன் ஆதரித்தழைத்தால்
 அதெந்துவே என்றருளாயே.”
[1]

குரவம்—குரா, குரவு, குருந்து தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ்கள் இணைந்தது. இன்பெரே
தாவரக் குடும்பம் : ரூட்டேசி
தாவரப் பேரினப் பெயர் : அடலான்ஷியா
தாவரச் சிற்றினப் பெயர் : மிசியோனிஸ்
தாவர இயல்பு : சிறுமரம், முள் அடர்ந்தது
தாவர வளரியல்பு : மீசோபைட். வறண்ட நிலத்திலும், காடுகளிலும் வளரும். என்றும் தழைத்து வளரும்.
இலை : 3 சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை யெனினும் ஒரே ஒரு நுனியில் உள்ள சிற்றிலை மட்டும் சற்று மங்கிய பச்சை நிறமானது. பக்கத்திலிருக்க வேண்டிய சிற்றிலைகள் இரண்டும் அருகி விட்டன. எனினும் இலைக் குருத்துகள் செதில்களாகக் காணப்படும். இலைச் சருகு மங்கிய கறுப்பு நிறமாக மாறும்.
இலை நரம்பு : சிற்றிலையில் 8-10 இணையான நரம்புகள் வெளிப்படையாகத் தோன்றும்.
 

  1. திருவா : 29 : 5. 3-4