பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

கிதழ்கள் ஒட்டியிருக்கும். படகிதழ்கள் இரண்டும் நுனியில் ஒட்டியிருக்கும்.
மகரந்த வட்டம் : 10 தாதிழைகள் ஒன்றாய் ஒரு கட்டாக அடியில் இணைந்து இருக்கும். ‘வெக் சிலரி’ தாதிழை அடியிலும் மேலும் பிரிந்திருக்கும், தாதுப் பைகள் சீரானவை.
சூலக வட்டம் : சூல்தண்டு உள்வளைவானது. சூல்முடி குல்லாய் போன்றது. ஒரு சூலிலைச் சூலகம். இரு சூல்கள் உள.
கனி : வெடியாத உலர்கனி, ‘பாட்’ எனப்படும். தட்டையானது. அடியிலும், நுனியிலும் குறுகி இருக்கும். 5-6×2-3 செ.மீ. ஒரு விதை. சிறு நீரக வடிவானது. தடித்தது.

இதன் மரம் வலியது; வெண்ணிறமானது. வண்டிச் சக்கரங்கள் செய்வதற்கும் பயன்படும். இதன் விதையில் ஒரு வித எண்ணெய் உளது. இது விளக்கெரிக்கவும், மருந்தாகவும் பயன்படும். இம்மரப்பட்டை தடித்தது; கரிய பழுப்பு நிறமானது. இதனை மருந்துப் பொருள் என்பர்.

பொங்காமியா’ என்ற இப்பேரினத்தில் ‘கிளாப்ரா’ என்ற சிற்றினம் மட்டும் ஆற்றோரங்களிலும், வெற்றிடங்களிலும் தமிழ் நாட்டில் பரவலாக வளர்கிறது. 3000 அடி உயரம் வரையிலான மலைப் பாங்கிலும் காணப்படுகிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை : 2n = 22 என பட்டேல், ஜே. எஸ். நாராயணா (1937) முதலியோர் கணக்கிட்டுள்ளனர்.