பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

233

தாவர இயல்பு : நீண்டு வளரும் சுற்றுக் கொடி.
இலை : மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. சிற்றிலைகள் அகன்ற ‘டெல்டாயிட்’ வடிவானவை. இலைச் செதில்கள் அடி ஒட்டியவை.
மஞ்சரி : நீளமான நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்திலும், கொடி நுனியிலும் உண்டாகும்.
மலர் : இணரில் 7-8 மலர்கள் இருக்கும். செந்நிற, வெளிர் நீல நிற, வெண்ணிற மலர்களை உடையது. மலர்களின் வடிவம் இத்தாவரக் குடும்பத்திற்கேற்ப அமைந்திருக்கும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழாய் வடிவானது. மேலேயுள்ள 2 புறவிதழ்களின் நுனி, கூம்பு போன்றவை.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இருபக்க இதழ்கள் ஒரே மாதிரியானவை. இவை சிறகிதழ்கள் எனப்படும். மேற்புறத்தில் உள்ள பெரிய, அகன்ற இதழ் பதாகை எனப்படும். அடியில் உள்ள இரு இதழ்கள் அடியில் ஒட்டிக் கொண்டு படகு போன்றிருக்கும். இவ்விரு இதழ்களும் நுனியில் இணைந்து, உள்வளைவாகக் கிளி மூக்குப் போன்றிருக்கும்.
மகரந்த வட்டம் : இரு தொகுதியான (9 - 1) ஒரு படித்தான 10 மகரந்தத் தாள்கள். தாதிழைகள் மெல்லியவை.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. பல சூல்கள் உண்டாகும். சூல்தண்டு மேற்பகுதியில் தடித்திருக்கும். நுண்மயிர் அடர்ந்திருக்கும். சூல்முடி உருண்டையானது.
கனி : அவரைக்காய் முதிர்ந்து பாட் (Pod) என்ற உலர் கனியாகும்.