பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

15

ஆம்பல், குவளை முதலான நீர்க்கொடிகள், ‘நிம்பேயா’ (Nymphaea) என்ற தாவரப் பேரினத்தில் அடங்கும். இதில் 32 சிற்றினங்கள் வெப்பநாடுகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இப்பேரினத்தைச் சார்ந்த இரண்டு சிற்றினங்களை மட்டும் காம்பிள் என்பவர் குறிப்பிடுகின்றார். அவற்றுள் ஒன்று குவளை; மற்றொன்று ஆம்பல். இப்பேரினத்தின் பெயர், அடிப்படையிலேயே நிம்பயேசீ (Nymphaeaceae) என்ற தாவரக் குடும்பப் பெயராக அமைந்துள்ளது. இக்குடும்பத்தைச் சேர்ந்த நிலம்பியம் (Nelumbium) என்ற தாமரையும் நமது நாட்டில் இயல்பாக வளர்கின்றது.

இத்தாவரக் குடும்பம் மூன்று சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் 8 பேரினங்களும் 100 சிற்றினங்களும் உள்ளன. ‘கேபம்பாய்டியே’ என்னும் இதன் சிறு குடும்பம், பெரிதும் அமெரிக்க நாட்டின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகின்றது. ‘நிலம்போனாய்டியே’ (Nelumbonoideae) என்ற மற்றொரு சிறு குடும்பத்தின் சிற்றினங்கள். வட அமெரிக்கப் பகுதிகளில் வளர்கின்றன. இவற்றுள் ‘நிலம்போ லூட்டியா’ (Nelumbo lutea) என்ற மஞ்சள் நிற மலர்ச் செடி நமது தாமரையை ஒத்தது. இதனை மஞ்சள் தாமரை என்று சொல்லலாம். தாமரைக் கொடி நிலம்பியம் ஸ்பீசியோசம் (Nelumbo speciosum) எனப்படும். இதனை முன்னர், நிலம்போ நூசிபெரா (Nelumbo nucifera) எனவும், நிம்பேயா நிலம்போ (Nymphaea nelumbo) எனவும் வழங்கினர். இதன் விரிவைத் ‘தாமரை’ என்ற தலைப்பில் காணலாம்.

நிம்பயாய்டியே என்னும் துணைக் குடும்பத்தை நிம்பயே (Nymphaeae) என்னும் துணைப்பிரிவாக (Sub-Order) ஹுக்கர் கூறுவார். இதில் 5 பேரினங்கள் உள்ளன. விக்டோரியா என்ற பேரினம், அமெரிக்காவில் அமேசான் மாவட்டத்தில் காணப்படுகிறது. விக்டோரியா ரீஜியா (Victoria regia) என்ற பெருந்தாமரைக் கொடி மிகவும் புகழ் வாய்ந்தது. இதன் வட்ட வடிவான இலைகள் ஆறு முதல் ஏழு அடி வரை அகலமானவை. இதன் மலர் ஓரடிக்கு மேற்பட்ட அகலமுடையது. இச்செடியை பம்பாயில் அழகுச் செடியாக வளர்த்து வருகின்றனர். தாவர உலகில் மிகப் பெரிய இலையை உடையது இச்செடிதான்.

நிம்பேயா என்னும் மற்றொரு பேரினத்தைச் சார்ந்தவைதான் ஆம்பல், குவளை முதலியன. ‘நிலம்பியம்’ (Nelumbium) என்பது இன்னொரு பேரினம். நமது நாட்டில் புகழ்