பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

சங்க இலக்கியத்


மருதம் தமிழிசையில் ஒரு வகையான பண் எனவும் படும். தாள அறுதியை இனிதாகக் கொண்டு, யாழ்க்கருவியின் நரம்பைத் தெரிந்து யாழோர் மருதப் பண்ணை இசைப்பர் என்று மதுரைக் காஞ்சி கூறுகின்றது.

“சீர்இனிது கொண்டு நரம்பினிது இயக்கி
 யாழோர் மருதம் பண்ண”
-மதுரைக்கா. 657-658

மருதம் காலைப்பண் என்று பரணர் கூறுவர். (புறநா. 149) இவ்வுண்மையைச் சீவக சிந்தாமணிப் பாடலும் [1] வலியுறுத்தும்.

‘வைகறை விடியல்-மருதம்’ என்று மருதத்திற்குப் பொழுது கூறிற்று தொல்காப்பியம். (அகத்: 9)

மருதம் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : காலிசிபுளோரே (Calyciflorae),
மிர்டேலீஸ் (Myrtales)
தாவரக் குடும்பம் : காம்பிரிடேசீ (Combretaceae)
தாவரப் பேரினப் பெயர் : டெர்மினாலியா (Terminalia)
தாவரச் சிற்றினப் பெயர் : அர்ச்சுனா (arjune, W. A.)
தாவர இயல்பு : மரம். உயரமான, அகன்ற, பொலிவுள்ள இலையுதிர் மரம்.
தாவர வளரியல்பு : மீசோபைட். 15 முதல் 20 மீட்டர் உயரமாகவும், மேலே 10 மீட்டர் அகன்றும், தழைத்து வளரும்.
கிளைத்தல் : அடி மரம். 4 முதல் 8 மீட்டர் சுற்றளவுடையது. 3-4 மீட்டர் உயரத்திற்கு மேல் பெரிய கிளைகளை பரப்பி வளரும்.

  1. சீ. சிந்: 1991