பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சங்க இலக்கியத்

ஆம்பற் கொடியின் வேர்த் தொகுதியில் கிழங்கு இருக்கும். இக்கிழங்கு உணவாகப் பயன்படும். ஆம்பற் கிழங்கொடு புலால் நாற்றமுள்ள ஆமையின் முட்டையுடன் பரிசிலர் பெறுவர் என்ப:

“யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
 தேனாறு ஆம்பற் கிழங்கொடு பெறூஉம்”

-புறநா. 176 : 4-5

ஆம்பலின் இலைகளைக் கொய்து தழையணி கூட்டுவர் மகளிர்.

‘நீரில் வளர்ந்த வெள்ளாம்பலினது அழகிய மாறுபடக் கூடிய நெறியுடைய தழையுடையானது தேமலை உடைய துடையின் கண்ணே மாறி மாறி அசைய, சேயிழையுடைய பரத்தை அவ்விடத்தே வருமே’ என்று அஞ்சுகிறாள் ஒரு தலைவி :

“அய வெள்ளாம்பல் அம்பகை நெறித்தழை
 தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
 வருமே சேயிழை அந்தில்”

-குறுந். 293 : 5-7

“ஆம்பல் அணித்தழை ஆரத் துயல்வரும்
 தீம்புன லூரன் மகள்[1]

“அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
 இளைய மாகத் தழையா வினவே
 இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
 இன்னா வைகல் உண்ணும்
 அல்லிப் படூஉம் புல்லா யினவே”

(புல்லாயின-புல்லரிசியாய் உதவின.)
- புறநா. 248

ஆம்பல் மலர் ஆடவர் சூடவும், அணியவும் பயன்பட்டது.

“வன்கை வினைஞர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்”

- பதிற். 62 : 16-17

நீலம், அல்லி, அனிச்சம், முல்லை முதலியவற்றைக் கண்ணியாகப் புனைந்து சூட்டிக் கொள்வர். (கலி. 91 : 1)

ஆம்பல் மலரை மகளிர் வாய்க்கு உவமிப்பர்.


  1. திணை மொ. ஐ. 40