தாவரங்கள்
23
“முகம் தாமரை, முறுவல் ஆம்பல், கண்நீலம்”[1]
“வாவிதொறும் வண்கமலம் முகங்காட்ட
செங்குமுதம் வாய்கள் காட்ட”[2]
பசந்த கண்ணிற்கு ஆம்பல் உவமிக்கப்படும்.
“பொய்கை பூத்த புழைக்கால் ஆம்பல்
தாதேர் வண்ணங் கொண்டன
எதிலார்க்குப் பசந்த என் கண்ணே”-ஐங். 34
வெள்ளாம்பல் திங்களைக் கண்டு மலருமென்ப.
“மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல் வான்மலர்”-கலி, 72:6
“ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப்
பூங்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி
அந்தி அந்தணர் அயர”-குறிஞ். 223-225
இன்னும் ஆம்பற்கொடி, கொட்டி, நெய்தல் முதலிய நீர்வாழ் தாவாங்களுடன் வளரும் என்பதை ‘அற்ற குளத்தில் அருநீர்ப் பறவை போல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போலவே ஒட்டியுறுவார் உறவு’ என்ற பாடலிற் காணலாம். மேலும், நீர்த்துறையில் தாமரையுடன் ஆம்பல் வாழும் என்பதைப் புலப்படுத்துகின்றார் பரணர். ‘தொடியணிந்த அரசர் மகள் சினங்கொண்டவுடன்’ அவளது தோழியர் குழாம் இறைஞ்சி நிற்பது போல, பெருங்காற்று மோதும் போது ஆம்பல் குவிந்து தாமரை மலரிடத்தில் வந்து சாய்ந்து வணங்குமென்கிறார்:
“சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்
மடத்தகை ஆயம் கைதொழு தாங்கு
உறுகால் ஒற்ற ஓங்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்”
இதனுள் ஆயத்தார் கைதொழுமாறு போல தாமரையை நோக்கி ஆம்பல் கூம்பும் என்றபடியால் இது காலைப்பொழுதென்றும், அப்போது ஆம்பல் குவிந்து தாமரை மலர்ந்திருக்குமென்றும் அறிதல் கூடும்.