இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
393
மஞ்சரி | : | தனி மலர். காம்பின்றி இணைந்தது. |
மலர் | : | அழகிய இளஞ்சிவப்பு நிறமானது. |
புல்லி வட்டம் | : | குழல் வடிவானது. நீண்ட மயிர்ச் சுரப்பிகள் நிறைந்து இருக்கும். 5 பிளவானது. |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் 5 அடியில் இணைந்து, நீண்ட குழல் போன்றது. மடல்கள் விரிந்திருக்கும். |
மகரந்த வட்டம் | : | 5 தனியான தாதிழைகள் தாதுப் பைகள் நுனி ஒட்டியவை. சற்று அகன்று நீண்டவை. |
சூலக வட்டம் | : | சூலகம் நுனியில் குறுகியிருக்கும். சூல் தண்டு நுனியின் இரு கிளைகளாகி இருக்கும். |
கனி | : | காப்சூல், வெடிகனி. |
விதை | : | தனித்துள்ளது. வித்திலைகள் அடியில் குறுகி, நுனியில் அகன்றிருக்கும். |
‘செங்கொடுவேரி’ எனப்படும் கொடிவேலியின் வேர் மருந்துக்குப் பயன்படும். பொதுவாகக் கொடிவேலி எனப்படும். இச்செடியில் வெள்ளை நிறப்பூ உடையதும், நீல நிறப்பூவுடையதுமான செடிகள் உண்டு. இவையனைத்தும் மருந்துச் செடிகளே.