பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

393

மஞ்சரி : தனி மலர். காம்பின்றி இணைந்தது.
மலர் : அழகிய இளஞ்சிவப்பு நிறமானது.
புல்லி வட்டம் : குழல் வடிவானது. நீண்ட மயிர்ச் சுரப்பிகள் நிறைந்து இருக்கும். 5 பிளவானது.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் 5 அடியில் இணைந்து, நீண்ட குழல் போன்றது. மடல்கள் விரிந்திருக்கும்.
மகரந்த வட்டம் : 5 தனியான தாதிழைகள் தாதுப் பைகள் நுனி ஒட்டியவை. சற்று அகன்று நீண்டவை.
சூலக வட்டம் : சூலகம் நுனியில் குறுகியிருக்கும். சூல் தண்டு நுனியின் இரு கிளைகளாகி இருக்கும்.
கனி : காப்சூல், வெடிகனி.
விதை : தனித்துள்ளது. வித்திலைகள் அடியில் குறுகி, நுனியில் அகன்றிருக்கும்.

‘செங்கொடுவேரி’ எனப்படும் கொடிவேலியின் வேர் மருந்துக்குப் பயன்படும். பொதுவாகக் கொடிவேலி எனப்படும். இச்செடியில் வெள்ளை நிறப்பூ உடையதும், நீல நிறப்பூவுடையதுமான செடிகள் உண்டு. இவையனைத்தும் மருந்துச் செடிகளே.