பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

விதை : நீண்டு அடியில் குறுகியிருக்கும். தட்டையானது. வித்திலைகள் மெல்லியவை. பட்டையாக இருக்கும்.

இதன் மரம் மர வேலைக்கு உகந்தது. மிக வலிமையானது. மரத்தின் நடுவில் வைரம் பாய்ந்த பகுதி கறுப்பாக இருக்கும். ‘ரோஸ் உட்’ என்றும் ‘இந்திய எபெனி மரம்’ என்றும் பெயர்படும்

டையோஸ்பைரஸ் என்னும் இப்பேரினத்தில் 24 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. பெரும்பாலும் இவை வறண்ட மலைப் பகுதிகளில் பசுமைக் காடுகளிலும் வளரும் மரங்களும், பெரும்புதர்களும் ஆகும். பல சிற்றினங்களின் மரங்கள் மர வேலைக்குப் பயன்படுகின்றன.