பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

631

தாவரச் சிற்றினப் பெயர் : அபிசினாலிஸ் (officinalis)
சங்க இலக்கியப் பெயர் : நெல்லி
உலக வழக்குப் பெயர் : நெல்லி, பெருநெல்லி.
தாவர இயல்பு : மரம். இரண்டாகக் கிளைத்துத் தழைத்து வளர்வது 4000 அடி உயரம் வரையில் மலைப் பகுதிகளிலும் வளரும்.
இலை : சிறகன்ன கூட்டிலை போலத் தோன்றும் மிகச் சிறு இலைகள், 100 வரையில் சிறு கிளைகளில் உண்டாகும். 0.3-0.75 அங்குல நீளமும், 0.1 அங். அகலமும் உள்ளது.
மஞ்சரி : ஆண் மலரும், பெண் மலரும் தனியானவை. பெண் மலர்கள் அடியிலும், ஆண் மலர்கள் மேலேயும் அமைந்து, கொத்தாக இலைக் கோணத்தில் உண்டாகும்.
புல்லி வட்டம் : 5-6 சற்று நீண்ட புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இல்லை.
மகரந்த வட்டம் : ஆண் மலரில் 3 தாதிழைகள் கூம்பு போலத் தோன்றும். தாதுப்பைகள் ஒன்றாகத் திரண்டு, தாதுப் பைகளின் 3 இணைப்புகளும் நீண்டு இருக்கும். தாதுப் பைகள் நீள்வாக்கில் பிளக்கும்.
சூலக வட்டம் : பெண் மலரில் 3 செல் உள்ள சூலகம் ஒவ்வொன்றிலும் இரு சூல்கள் உள்ளன சூல்தண்டு நீண்டு சூல்முடி இரு முறை பிளவுபட்டு அடிப் புறமாக வளைந்திருக்கும்.
கனி : உருண்டை வடிவான சதைக் கனி: 0.5-0.9 அங். நீளமும், 0.2-0.3 அங். அகலமும் உள்ளது.
விதை : 3 வலிய இரண்டு வால்வுகளை உடைய ‘காக்கஸ்’ என்ற 6 விதைகள் உண்டாகும். விதையிலை தட்டையானது; அகன்றது.