பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

632


நெல்லிக்கனி சுவையான உணவுப் பொருள். இதன் கனிகளுக்காக இம்மரம் வளர்க்கப்படும். இது நல்லதொரு மருந்துப் பொருளுமாகும். இதன் அடிமரம் வலியது. நுகத்தடியாகப் பயன்படும். இம்மரத்தைக் கிணறுகளில் போட்டு வைப்பதால், கிணற்று நீர் சுவையாக இருக்கும். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 28 என பெர்ரி, பி. ஏ. (1943) என்பாரும், 2n = 98 என இராகவன், ஆர்.எஸ். (1958 ஏ) என்பாரும் கணக்கிட்டுள்ளார்.