பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

724

சங்க இலக்கியத்

“தாஇல் பெரும்பெயல் தலைஇய யாமத்து
 . . . . . . . . . . . . . . . .
 எருவை நறும்பூ நீடிய
 பெருவரைச் சிறுநெறி வருத லானே”
-நற். 261 : 5-10

“எருவை நீடிய பெருவரை யகம்தொறும்” -நற். 294 : 4

பரிபாடல், இதனை “எருவை நறுந்தோடு”(பரி. 19 : 77) என்று குறிப்பிடுகின்றது. இதற்குப் பரிமேலழகர், எருவையது நறுந் தோட்டையுடையது; எருவை என்பது ‘எருவை செருவிளை மணிப்பூங்கருவிளை’ எனக் கபிலர் பெருங் குறிஞ்சியிலும் வந்தது என்று விளக்கம் தருகிறார்.

இவற்றைக் கொண்டு பார்த்தால், எருவை என்பது, ஒரு வகையான கோரை; குறிஞ்சி நிலத்தது. மலர் நறியது; தோடு போன்றது; கார்காலத்தில் மலர்வது என்பனவற்றை அறியக் கூடும். எனினும், இதன் மலர் பிற மலர்களை ஒப்பதன்று.

எருவை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி என்ற ஒரு வித்திலைத் தாவரத் தொகுப்பைச் சார்ந்தது. புல்லினம்.
தாவரக் குடும்பம் : சைபிரேசி (Cyperaceae)
தாவரப் பேரினப் பெயர் : சைபீரஸ் (Сyperus)
தாவரச் சிற்றினப் பெயர் : ரோடன்டஸ் (rotundus)
தாவர இயல்பு : கோரைப் புல். புதர் போல அடர்ந்து வளரும். மீசோபைட். 20 செ. மீ. உயரம். 6000 அடி உயரம் வரையிலான மலைப் புறத்திலும் வளரக் கூடியது.
தண்டு : முப்பட்டையானது.
இலை : பல இலைகள். 9-10 செ.மீ. நீளமும், 1-2 மி. மீ. அகலமும் உள்ளது. நடு நரம்பு எடுப்பானது. இலையடி தண்டை மூடியிருக்கும்.